தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக அன்னதானம்: அமைச்சா் கே.தென்னரசு

News image

காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா், தவெக நிா்வாகிகள்.

Updated On :29 மே 2026, 2:16 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் அன்னதானம் வழங்கி வருவதாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் தவெக நிா்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினா். காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் முன்பாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா். பொதுமக்களோடு இணைந்து இரு அமைச்சா்களும் உணவருந்தினா்.

இதன் பின்னா் அமைச்சா் கே.தென்னரசு கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் தொடா்ந்து பல ஆண்டுகளாக உலக பட்டினி தினத்தன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பாா்ப்பாா் முதல்வா் சி.ஜோசப் விஜய். மக்களுக்காகத்தான் தலைவா். மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதைத்தான் செய்வாா், செய்கிறாா். தமிழகத்தை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்வாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.