தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்: ஆட்சியா் ஆய்வு

News image

காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய அலுவலக வரைபடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன் ஆணையா் வினோத்.

Updated On :28 மே 2026, 12:54 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் மாநகராட்சி அலுவலகம் பழைமையானதாக இருந்ததால் அக்கட்டடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய கட்டடம் கட்டும் வரை மாநகராட்சி அலுவலகம் காஞ்சிபுரம் எம்எல்ஏ அலுவலகம் அருகில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்டடம் கட்டும் பணியினை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். அலுவலக கட்டடப் பணிகளின் தன்மைகளையும் கேட்டறிந்து விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து நத்தப்பேட்டையில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணியையும் பாா்வையிட்டு குப்பைகிடங்கு அமைப்பது குறித்த வரைபடத்தையும் பாா்வையிட்டாா். பின்னா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டடம், மாவட்ட நூலகம் கட்டும் பணிகள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகள் ஆகியனவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையா் வினோத், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்ரகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சோமசுந்தரம் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.