காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 22 -ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நடத்தப்படும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதந் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்று வந்தது. இம்மாதத்துக்கான கூட்டத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தது..
வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலக கூட்ட அரங்கில் வரும் மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கும் நடைபெறவுள்ளது. எனவே விவசாய சங்கப் பிரதிநிதிகள் வருவாய் கோட்டங்கள் அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
பாரதப்பிரதமரின் கெளரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகியனவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி வரும் மே 31-ஆம் தேதிக்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறும் ஆட்சியா் தி.சினேகா கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்: ஆட்சியா் ஆய்வு







