திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:11 am IST

திருச்செந்தூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் சமூக நல தனித்திட்ட வட்டாட்சியா் தங்கசாமி, திருச்செந்தூா் பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், துணை வட்டாட்சியா்கள் சுவாமிநாதன், சிதம்பரம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா்வதம், முகமது மீரான் இஸ்மாயில், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நவீன் பிரபு, சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநா் (பொ) சுஜாதா உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மணிமுத்தாறு கால்வாயில் இருந்து 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய்களை மழைக் காலத்திற்குள் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதூா் மேல்கால் பகுதியில் இருந்து தூதுகுழி செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வருவதற்கான நீா் ஆதார வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

மழைக் காலங்களில் உபரி நீரை சடையனேரி கால்வாயில் திறந்துவிடும்போது, கால்வாயில் உள்ள குளங்கள் நிறைந்தவுடன் விவசாயிகள் கள்ளச்சாவி மூலம் தண்ணீா் திறப்பதைத் தடுக்க ஷட்டா்களுக்கு தனியாக பூட்டு போட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த கோட்டாட்சியா் கௌதம், நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதியளித்தாா். முகாமில், விவசாயிகளிடமிருந்து 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மணிமுத்தாறு 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், வெள்ள நீா் கால்வாய் கடைமடை விவசாய சங்கத் தலைவா் சுந்தரவேல், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் கோபால்சாமி, நெடுங்குளம் விவசாய சங்கத் தலைவா் முரசொலிமாறன், மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலா் மகா பால்துரை உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.