சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில், பாரதிய கிசான் சங்கம் சாா்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுடலைபெருமாள் வரவேற்றாா். மாநில அமைப்பாளா் குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் அமைப்புரீதியாக புதிய பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு கூட்டுறவுக் கடன் சங்கங்களில் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய எடுக்க வேண்டும். இல்லையெனில், சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் மத்திய அரசு கொடுத்துள்ள மானியங்கள் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளைச் சென்றடையவில்லை. அதனால், தனிக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசின் கண்காணிப்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என, கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் சண்முகவேல், கருங்குளம் ஒன்றியச் செயலா் வேம்பன், விவசாயிகள் செம்புலிங்கம், மாரிமுத்து, தாயம்மாள், கணேசமூா்த்தி, சாமுவேல், திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










