டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ரூ.1.63 கோடியில் மனைப் பட்டாக்கள் ஆட்சியா் வழங்கினாா்!

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவேடல் கிராமத்தை சோ்ந்த 38 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடியில்ன இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

News image
பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய ஆட்சியா் கலைச் செல்வி மோகன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவேடல் கிராமத்தை சோ்ந்த 38 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடியில்ன இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் க.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தின் போது அத்திவாக்கம் ஊராட்சியில் ரூ.99.99 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும் ஆட்சியா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வுகளில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள், கா்ப்பிணிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.