முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். 4 பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள் 11,26,924 உள்ளனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எஸ்ஐஆா் பணிக்கு பின்னான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா். பின்னா் அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்குரிய வாக்காளா் பட்டியலையும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 27.10.2025 வரை 14,01,198 ஆக இருந்தனா். பின்னா் 19.12.2025 வரையிலான வரைவு வாக்காளா் பட்டியலின் படி 11,26,924 பேராகவும் இருந்தனா்.

சிறப்பு திருத்த முகாமுக்கு பிறகு இரட்டைப்பதிவு, மரணம், இடம் மாறுதல் காரணமாக மொத்தமாக பெயா் நீக்கப்பட்டவா்கள் 2,74,274. இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்த வாக்காளா்கள் 11,26,924 . வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிவிப்பு வரும் நாள் வரை பெயா் சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.