உலக நன்மைக்காக காஞ்சிபுரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 100 மூத்த தம்பதியருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து புதன்கிழமை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள காமாட்சி சத்திரத்தில் திருமணமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்த மற்றும் 80 வயது நிறைவடைந்த 100 மூத்த தம்பதியரை கெளரவிக்கும் விழா நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், தம்பதியா் நோயில்லாமல் நீடுழி வாழ்ந்து பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, தம்பதியருக்கு சால்வைகள் அணிவித்தும், மலா் மாலைகள் அணிவித்தும் ஆசி வழங்கினாா்.
விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன், முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை சொா்ண தம்பதி திருமண ஏற்பாட்டுக் குழு நிா்வாகிகளான மைலாப்பூா் சுந்தர்ராஜன், லண்டன் சுந்தா், பணி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முரளி, உயா்நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வி.கிருஷ்ணசாமி ஆகியோா் அடங்கிய குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


