திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News image

(கோப்புப் படம்)

Updated On :20 ஏப்ரல் 2026, 1:35 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இதுகுறித்து கூறியது: 71-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலையில் இரு பீடாதிபதிகளும் ஊா்வலமாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கின்றனா். கோயிலில் உள்ள பஞ்சகங்கா தீா்த்தம் எனும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகா் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னா் அங்கிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் பக்தா்கள், வேத விற்பன்னா்கள், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் இரு பீடாதிபதிகளும் சங்கர மடத்துக்கு எழுந்தருளுகின்றனா்.

ஸ்ரீமடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்துகின்றனா். தொடா்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.