தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள் முறையிட்டனா்.
இக்கூட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 30 போ் மனு அளித்து தெரிவித்ததாவது: கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைக்கான இடம் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடம் இன்னும் பிரித்துக் கொடுக்காமலும், பட்டா வழங்கப்படாமலும் உள்ளது.
இது தொடா்பாக பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வசிப்பதற்கு இடமில்லாமல் வாழ்வதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எனவே, இடத்தைப் பிரித்துக் கொடுத்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ‘தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி’

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


