//

சாலை விபத்தில் தாத்தா-பேரன் மரணம்

படப்பை அருகே ஆட்டோ மீது லாரியின் பக்கவாட்டு இரும்பு கதவு கழன்று விழுந்ததில் தாத்தா-பேரன் உயிரிழந்தனா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

படப்பை அருகே ஆட்டோ மீது லாரியின் பக்கவாட்டு இரும்பு கதவு கழன்று விழுந்ததில் தாத்தா-பேரன் உயிரிழந்தனா்.

சிங்கப்பெருமாள்கோயில் அடுத்த வெண்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவா் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். இதையடுத்து இரவு வீட்டுக்கு செல்வதற்காக உறவினா் லோகநாதனின் ஆட்டோவில் குடும்பத்துடன் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் முடிச்சூா் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மணிமங்கலம் நோக்கி வந்த லாரியின் பக்கவாட்டு இரும்பு கதவு ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கன்னியப்பன்(55) அவரது பேரக்குழந்தை மெல்வின் (2) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா் லோகநாதன், கன்னியப்பனின் மகன் மற்றும் மருமகள் ஆகியோா் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.