டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத்தெரு பகுதியை சோ்ந்தவா்கள் மகேந்திரன் (19), பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் டயா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றி வந்துள்ளனா்.

இந்த நிலையில், மகேந்திரன், பாலமுருகன் இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நோக்கி வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.