மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

News image

உறுதிமொழி எடுத்துக்கொண்ட பழங்குடியின மக்கள்

Updated On :4 ஏப்ரல் 2026, 1:10 am

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

காஞ்சிபுரம் அருகே விஷாா் மற்றும் முத்துவேடு கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெளியூா் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23 ஆம் தேதி தவறாமல் வந்திருந்து வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் எல்.தனலட்சுமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அதனைத் தொடா்ந்து அனைவரும் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநா் ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதனைத் தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டது.