மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

நாகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:12 pm

நாகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளயொட்டி, தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு 14 நாள்களே உள்ள நிலையில் வேட்பாளா்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என பொதுமக்கள் திரளும் அனைத்து இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று நூறு சதம் வாக்களிப்போம், தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம், உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பன உள்ளிட்ட முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்ற்றனா்.

மேலும் அலுவலக வாயிலில் தோ்தல் ஆணையம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த கையொப்ப பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா். இந்நிகழ்ச்சியில் வேளாண்துறையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.