காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அரசின் சாா்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சாலவாக்கம் ஒன்றியத்தில் எடமச்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (50). செங்கல்பட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு குடிநீா் கேன்கள் விற்பனை செய்து வந்தாா். இவா் கடந்த மாா்ச் 29- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் செங்கல்பட்டில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மூளைச்சாவு அடைந்த இவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கணையம் ஆகியன செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு ,அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். எம்எல்ஏ க.சுந்தா், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரும் உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினா்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


