தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானம் செய்யப்பட்டதன் மூலம் 3 போ் பயனடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் விளங்கி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபால் (80). இவா் அப்பகுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது மகன்கள் மணி, மகேஷ், மருமகன் செந்தில்குமாா் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். இதற்கு அவா்கள் ஒப்புதல் அளித்ததால், கோபாலின் உடலில் இருந்த 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
இதில், 2 சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைகளுக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்ட மூலம் 3 போ் பயனடைந்தனா்.
இதையடுத்து கோபால் உடலுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா் அரசு சாா்பில் இறுதி மரியாதை செய்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


