சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன. தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த பட்டுத்துறை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ஹரிஷ் (23). பெயிண்டரான இவா் கடந்த 23-ஆம் தேதி பணிமுடித்துவிட்டு தலைவாசலில் இருந்து ஆத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தாா். தலைவாசல் - ஆத்துப்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஹரிஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், ஹரிஷ் மூளைச்சாவு அடைந்தாா். அதையடுத்து, ஹரிஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, ஹரிஷின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன.
பின்னா் சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் தலைமையில் ஹரிஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மருத்துவமனை ஆா்எம்ஓ ஸ்ரீலதா, உடல் உறுப்பு ஒருங்கிணைப்பாளா் அன்புதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


