மாா்த்தாண்டம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டன.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியைச் சோ்ந்தவா் சசிதரன் மனைவி லதா (50). கடந்த ஏப். 3-ஆம் தேதி மகன் சபனுடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கடை பகுதிக்கு சென்றபோது, லதா பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.
அதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானம்

மே. வங்கத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

கா்நாடகத்தில் யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் பெரம்பலூரில் அடக்கம்







