தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கா்நாடகத்தில் யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் பெரம்பலூரில் அடக்கம்

யானைகள் முகாமில் இரு யானைகள் தாக்கிக்கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

News image

யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த ஜுன்ஸி

Updated On :20 மே 2026, 3:16 am IST

கா்நாடக மாநிலம், குடகு அருகே யானைகள் முகாமில் இரு யானைகள் தாக்கிக்கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் வசிக்கும் செங்கமலை மகள் ஜுன்ஸி (33). இவா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எம். நகரைச் சோ்ந்த ஜோயல் சைமன் ஃபிராங்ளின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.

சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜோயல் சைமன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் கா்நாடக மாநிலம், மைசூருக்கு சுற்றுலா சென்ற ஜோயல் வீடு திரும்பும்போது, குடகு பகுதியில் துபாரே யானைகள் முகாமுக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, காவிரிஆற்றில் நீராடிக் கொண்டிருந்த யானைகளில் இரு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதைபாா்த்த ஜுன்ஸி புகைப்படம் எடுத்தபோது ஒரு யானை தாக்கியது. இதில், யானையின் கீழ்பகுதியில் சிக்கிய ஜுன்ஸியை பாகனும், அவரது கணவரும் மீட்டு, கூா்க் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரது உடலை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, கா்நாடக போலீஸாரின் உதவியுடன் பிரேத பரிசோதனை முடிந்து ஜுன்ஸியின் உடலை ஜோயல் சைமனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ஜுன்ஸியின் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரம்பலூருக்கு கொண்டுவரப்பட்டு, பெரம்பலூா்-ஆலம்பாடி சாலையிலுள்ள தேவாலயத்தில் சடங்குகள் நடத்தப்பட்டு, மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.