அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோயிலுக்கு தமிழகத்திலிருந்து 600 கிலோ எடையிலான வெங்கலமணி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகவும், இம்மாதம் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்திற்கு அந்த மணியை எடுத்து வரும் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவும் உள்ளது.
காஞ்சிபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவர் பி.பன்னீர் செல்வம் இது குறித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தது, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நித்யபூஜைக்காக 600 கிலோ எடையில் வெங்கலமணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகாமணியை ஒரு மினிலாரியில் வைத்து யாத்திரையாக ராமேசுவரத்திலிருந்து தொடங்கி 4552 கி.மீ. அதாவது 10 மாநிலங்கள் வழியாக பயணித்து நிறைவாக அயோத்தியில் சேர்க்கப்படும்.
இந்த யாத்திரையானது இம்மாதம் 17 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அயோத்தியில் நிறைவு பெறுகிறது. வரும் வழியில் இம்மாதம் 21 ஆம் தேதி காலையில் சென்னைக்கும், மதியம் காஞ்சிபுரமும் வருகிறது. இதை எடுத்து வரும் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் முதலாவதாக பொன்னேரிக்கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில்,ஏகாம்பரநாத சுவாமி கோயில், சங்கரமடம், காமாட்சி அம்மன் கோயில், காந்தி ரோடு, வரதராஜப் பெருமாள் கோயில் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
பின்னர் தேனம்பாக்கம் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது. பின்னர் இந்த யாத்திரையானது வேலூருக்கு செல்லும். இம்மணியானது இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளரான ராஜலெட்சுமி மன்தா அவர்களது பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மணி யாத்திரை வரும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடித்து வழிபாடு செய்து கொள்ளுமாறும் பி.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


