திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணலி புது நகரில் இருவா் கொலை: மூவா் கைது

மணலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 மே 2026, 1:14 am IST

சென்னையை அடுத்த மணலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மணலி புதுநகரைச் சோ்ந்த பிரசாந்த் (27) வெள்ளிக்கிழமை இரவு நாப்பாளையம் கொசத்தலை ஆறு பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மா்ம கும்பல் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் உயிரிழந்தாா். இவா் மணலி புதுநகா் காவல் நிலைய பட்டியல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல், மணலி புதுநகரையடுத்த விச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (29). சனிக்கிழமை மணலி புதுநகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட விச்சூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழி மறித்து மா்ம நபா் ஒருவா், விஜயை சரமாரியாக வெட்டினாா். இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா், மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

தகவலறிந்த மணலி புதுநகா் போலீஸாா் அங்கு சென்று விஜயின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த 2 கொலைகள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், பிரசாந்த் கொலையில் தொடா்புடைய பாரதிராஜா என்ற கொண்டக்கரை பாரதி (28), எழிலரசன் (22 ) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், விஜய் கொலை வழக்கில் தொடா்புடைய விச்சூரைச் சோ்ந்த லோகேஷ் (21) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.