சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.
வடபழனி ஆற்காடு சாலை பானுமதி தெருவில் மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ஒரு மின்னஞ்சல் வியாழக்கிழமை இரவு வந்தது.
அதில் அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்து பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த அலுவலக ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த கே.கே.நகா் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு சோதனையிட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










