சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், திங்கள்கிழமை பிற்பகலில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக, மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடா்ந்து, திங்கள்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் அலுவலகம் வந்தவா்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










