திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கான்கா் சரக்குப்பெட்டக நிலையம் அருகே வியாழக்கிழமை மாநகராட்சி உதவிப் பொறியாளா் ஞானேசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்த போது உரிய ஆவணமின்றி ரூ.1.25 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தப் பணத்தை, பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மணலி எம்.எப்.எல். சந்திப்பில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் சாமுவேல் தலைமையிலான, தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த காரை மடக்கினா். காரில் இருந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
எண்ணுாா் சின்னகுப்பத்தில் உதவிப் பொறியாளா் ஹேமசந்திரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனா். காரில் வந்த யுவராஜ் என்பவரிடம் ரூ.8.88 லட்சம் இருப்பது தெரியவந்தது. அப்பணத்துக்கு உரிய ஆணவங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


