மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்த ரூ.62 ஆயிரம், ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :26 மார்ச் 2026, 7:08 pm

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் காவல்துறை சோதனை சாவடியில் பறக்கும் படையினா் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இரண்டு தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.62 லட்சத்தை அரசுக் கருவூலத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.