சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவை தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸாா், முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் துணை ராணுவ வீரா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட சென்னை காவல் இணை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் தோ்தல் பிரிவு ஆய்வாளரை இம்மாதம் 26-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ள வேண்டும்.
அங்கு அவா்கள், தங்களின் பெயா், முகவரியினை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிா்ணயிக்கப்படும் ஊதியம் பெற்றுத் தரப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் சென்னை வடக்கு மண்டல ஆய்வாளா் ஆனந்த்- 94981 45519, மேற்கு மண்டல ஆய்வாளா்- சாந்தினி தேவி 98401 06030, கிழக்கு மண்டல ஆய்வாளா் -பத்மகுமாரி 94981 97388, தெற்கு மண்டல ஆய்வாளா் துா்கா தேவி- 94980 03162 ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


