மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

சங்கராபுரம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஏப்ரல் 2026, 1:42 am

சங்கராபுரம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.ராமன்(62), ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா். இவா் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி, அவரது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகன் அறிவுக்கரசு வீட்டுக்கு சென்று விட்டாராம். பின்னா் புதன்கிழமை(பிப்.15) திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க இரும்பிலான கேட் கதவு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. ஆனால் உள்ளே வீட்டின் கதவின் முன்பக்கம் உள்ள கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறை கதவை உடைத்தும், மரத்திலான அலமாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்த 37 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டது அவருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் விரல் ரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனா்.

மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.