மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கம்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்.

Updated On :21 மார்ச் 2026, 7:39 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கம்பம் அரசுப் போக்குவரத்துகழகப் பனிமனை முன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரால்டு அலெக்ஸாண்டா் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்கள் பங்கேற்றனா்.

Story image

இந்த ஊா்வலம் விவேகானந்தா் தெரு, தங்க விநாயகா் கோவில் தெரு, எல்.எப். சாலை, புதுப் பள்ளிவாசல், கம்பம்மெட்டு சாலை, நாட்டுக்கல் வழியாக சென்று அரசமரம் போக்குவரத்து காவல் சமிஞ்சையில் நிறைவு பெற்றது.

இந்தக் கொடி அணிவகுப்பில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.