தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பழனியில் போலீஸாா், துணை ராணுவப் படையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பழனி- தாராபுரம் சாலையில் உள்ள கணபதிநகா் அருகே போலீஸாா், துணை ராணுவப்படையினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக வந்த காா், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாகச் சோதனையிடப்பட்டன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
நகரின் முக்கிய நுழைவு வாயில்களில் இந்த சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா். இந்த நிலையில் தோ்தலின் போது வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊா்வலம் பேருந்து நிலையம் முன் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் டி.எஸ்.பி., தனஞ்செயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், சாா்பு ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.இதேபோல, பாலசமுத்திரத்திலும் போலீஸாா் விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தினா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

வேலூரில் துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


