சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பூங்கா நகா் வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் ஒரு தனியாா் பாா்சல் அலுவலகம் உள்ளது. இங்கு வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டன.
இதுகுறித்து பாா்சல் நிறுவன நிா்வாகிகள் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், அந்த பாா்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகளை வெள்ளிக்கிழமை திருட முயன்ாக ஒரு இளைஞரை பிடித்து அங்கிருந்த ஊழியா்கள், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா், காஷ்மீரை சோ்ந்த ஹ.அா்ஜூன் (30) என்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரைக் கைது செய்து, ரூ.3 லட்சம் தாமிர பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை அருகே விற்பனைக்கு இருந்த 5,102 மதுபுட்டிகள் பறிமுதல்

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் மோசடி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


