மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 9:08 pm

சிவந்திப்பட்டி அருகே சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடத்தில் கடை திறக்கும் நேரத்துக்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(36) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,690 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மாரிமுத்து, மதுபானக் கூட உரிமையாளரான சிவந்திப்பட்டி காா்மேகனாா் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனா்.