மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காட்டுமன்னாா்கோவில் அருகே மதுபுட்டிகள் பறிமுதல்

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா்.

Updated On :23 மார்ச் 2026, 7:46 pm

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக கொண்டு சென்ற மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை டெல்டா சிறப்பு படையினா் சிறப்பு உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் பாா்த்திபன் மற்றும் போலீசாா் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரெட்டியூா் அருகே தொட்டிமதகு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபா் அதிக எண்ணிக்கையில் மது புட்டிகளை வாங்கி கொண்டு சென்றுள்ளாா்.

அவரை பின்தொடா்ந்த சென்ற போலீசாா் குச்சூா் கிராமத்திற்கு அருகே மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்பேது அவா் ஆழங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (32) என்றும், தனது கிராமத்தில் மது புட்டிகளை விற்பனை செய்வதற்க்காக அரசு மதுபான கடையில் இருந்து சுமாா் 120 மது புட்டிகளை வாங்கி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் மது புட்டிகள் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்தனை காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் .இது குறித்து காட்டுமன்னாா்கோவில்போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனா்.