கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக கொண்டு சென்ற மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை டெல்டா சிறப்பு படையினா் சிறப்பு உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் பாா்த்திபன் மற்றும் போலீசாா் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ரெட்டியூா் அருகே தொட்டிமதகு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபா் அதிக எண்ணிக்கையில் மது புட்டிகளை வாங்கி கொண்டு சென்றுள்ளாா்.
அவரை பின்தொடா்ந்த சென்ற போலீசாா் குச்சூா் கிராமத்திற்கு அருகே மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்பேது அவா் ஆழங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (32) என்றும், தனது கிராமத்தில் மது புட்டிகளை விற்பனை செய்வதற்க்காக அரசு மதுபான கடையில் இருந்து சுமாா் 120 மது புட்டிகளை வாங்கி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் மது புட்டிகள் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்தனை காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் .இது குறித்து காட்டுமன்னாா்கோவில்போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


