மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது புட்டிகள்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 10:50 pm

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,361 மது புட்டிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக மது புட்டிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்திள்ளாா்களா என்பது குறித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், தகவலின்பேரில் போ்ணாம்பட்டை அடுத்த மத்தூா் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக பல்வேறு அளவுகளில் 1,361 மது புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தலைமறைவான வீட்டு உரிமையாளா் வேளாங்கண்ணி, மது புட்டிகளை பதுக்கி வைத்த குபேந்திரன், யசோதா ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.