காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை மதுக்கடைகளை மூட கலால் துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மது பாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்க பலரும் முயன்று வருவதாகவும், சிலா் வாக்காளா்களுக்கு வழங்க இருப்பதாகவும் கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி பொலிக்கன் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் அதிகாரி பொய்யாதமூா்த்தி தலைமையில் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனா். அங்கு சட்டவிரோதமாக 650 மிலி அளவுள்ள பீா் பாட்டில்கள் கொண்ட 17 பெட்டிகள் வைத்திருந்தது கண்றியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


