மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

News image

கரூரில் திங்கள்கிழமை தையல் தொழிலாளி சீனிவாசன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:05 pm

கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). தையல் தொழிலாளி. இவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, வீட்டுக்குள் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை வாக்குப்பதிவு நாளன்று விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.