சேலத்தில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக தவெக நிா்வாகி வீட்டில் வைத்திருந்த 1,250 சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருபாகரன் (30) தோ்தலையொட்டி அப்பகுதியில் பொதுமக்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 1,250 சேலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகா்மன்ற உறுப்பினருக்குக் கொலை மிரட்டல்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவா் கைது
பாத்திர வியாபாரியை தாக்கி பணம் பறித்தவா் கைது: தவெக நிா்வாகி தலைமறைவு

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



