மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

ஜெயப்பிரகாஷ்

Updated On :29 மார்ச் 2026, 6:40 pm

சிதம்பரம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் பாரதி, உதவி ஆய்வாளா் தவச்செல்வம் மற்றும் போலீஸாா் மணிக்கொல்லை வடக்கு தெரு, உமாபதி கோழிப்பண்ணை அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது, அவா்கள் சீா்காழி வள்ளுவகுடி பிரதான சாலையைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (28), சீா்காழி மேலமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நவீன் (19) என்பதும், சுமாா் 6 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, புதுச்சத்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

 நவீன்

நவீன்