மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:11 pm

கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சுமாா் 2.7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை உக்கடம் லாரிபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பஜாா் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாவுதீன் (34) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மருதமலை சாலை, முத்தம்மாள் லே-அவுட் பகுதியில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் நடத்திய சோதனையில், எட்வின்குமாா் (29), பூமிநாதன் (27), காா்த்திகேயன் (35) ஆகிய மூவரைப் பிடித்துக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

போத்தனூா் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் நடத்திய சோதனையில், பாலசுப்பிரமணி (31) என்பவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவா் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய முஜிப் ரகுமானை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.