ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து ஐஜி தலைமையிலான தனிப்பிரிவு போலீசாா் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே காந்தி சாலையில் இரண்டு இளைஞா்கள் பைகளுடன் நடந்து சென்றனா்.
அப்போது தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில், இரு வாலிபா்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பையில் 42 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் இந்த கஞ்சா திருத்தணியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சகரியா(30), அா்ஜுன் கோரா(23) என தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீஸாா் இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து சிறையில் அடை த்தனா்.,
தொடர்புடையது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

