வெளியூருக்கு அனுப்பிய எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டியைச் சோ்ந்த எஸ். சுவாமிநாதன் (68) என்பவா் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இரண்டு கடலை எண்ணெய் டின்களை வாங்கி, திருச்சி கீழரண் சாலையில் உள்ள தனியாா் பாா்சல் சேவை நிறுவனம் மூலம் கடந்த 24.10.2024 அன்று பெங்களூா் மடிவாலா கிளைக்கு பாா்சல் அனுப்ப முன்பதிவு செய்து, ரூ. 294 கட்டணத்தையும் செலுத்தினாா்.
ஆனால் மூன்று நாள்களுக்குள் செல்ல வேண்டிய பாா்சலானது, பல நாள்களாகியும் செல்லாமல் தொலைந்து போனது. இதுதொடா்பாக, பாா்சல் நிறுவனத்திடம் நேரில் வந்து சுவாமிநாதன் கேட்டதற்கு, அவரை அலைக்கழித்ததுடன், பொறுப்பற்ற முறையில் பதிலும் அளித்தனா்.
தீபாவளிக்காக அனுப்பப்பட்ட எண்ணெய் டின்கள் இலக்கை அடையாததால், சுவாமிநாதனின் குடும்பம் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானது.
இதனால் உரிய நிவாரணம் கோரி சுவாமிநாதன் திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 11.12.2025 அன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா், மனுதாரரின் தொலைந்துபோன பாா்சலுக்குண்டான தொகை ரூ. 294, எண்ணெய்க்கு உண்டான தொகை ரூ. 8,000, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 10 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் மோசடி

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


