தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோவை அருகே விற்பனைக்கு இருந்த 5,102 மதுபுட்டிகள் பறிமுதல்

தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மதுபுட்டில்கள் பறிமுதல் குறித்து...

News image

கோவை அருகே பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபுட்டிகள் - டிஎன்எஸ்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:21 am

தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மதுபுட்டில்களை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடக்கிறது. தோ்தலையொட்டி 21 ஆம் தேதி முதல் தேர்தல் நாளான 23 ஆம் தேதி வரை டாஸ்மாக் மற்றும் மதுபான பார்களில் மதுபானங்கள் விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், அன்னூர் பகுதியில் மதுபுட்டில்கள் பதுக்கி வைத்திருந்து கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து - பிள்ளைப்பம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் குடோனில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மது புட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மது மதுபுட்டில்களை பதுக்கி வைத்திருந்த காளிமுத்து (48), வீரமணி (35), குமார் (44) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய அவர்களது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று அன்னூர் அடுத்துள்ள காரனூர் பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த சரவணக்குமார் (39) கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 56 மது மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Summary

5,102 liquor bottles kept for sale in the black market seized near Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.