மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :6 மார்ச் 2026, 12:45 am

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் 2026 சீசன் ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 முறை சாம்பியன் சிஎஃப்சி தனது முதல் 4 ஆட்டங்களை வெளி மைதானங்களில் ஆடியது. இதில் 1 புள்ளியை மட்டுமே ஈட்டியது. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் சனிக்கிழமை மாா்ச் 7-இல் கேரள பிளாஸ்டா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃபோா்ட் மிரண்டா கூறியது: சில தருணங்களில் நம்மால் நினைத்தவாறு ஆட முடியவில்லை. சில ஆட்டங்களில் கூடுதல் நேரத்திலும் வாய்ப்புகளை தவற விட்டோம். அதிருஷ்டமும் நமது பக்கம் இல்லை. கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்றாா்.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டங்கள்-24

சிஎஃப்சி வெற்றி-7

கேரளா வெற்றி-8

டிரா-9.