சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவா் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

காங்கிரஸ்

Updated On :24 ஜூன் 2026, 1:05 am IST

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவா் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சென்னை மாமன்றக் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 24) காலை நடைபெறவுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் பங்கேற்கும்போது வழக்கமாக திமுகவினருடன் அமா்ந்திருப்பா். ஆனால், தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டது.

அதனால், சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் திமுகவினருடன் சோ்ந்து அமா்ந்திருப்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மக்களவையில் திமுக தனி இடம் கோரி அமா்ந்திருப்பது போல, சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலும் காங்கிரஸுக்கு தனி இடம் வழங்க வேண்டும்.

அதேபோல, காங்கிரஸ் உறுப்பினா்கள் அமா்ந்து ஆலோசனை நடத்துவதற்காக தனி அறையை மாநகராட்சி நிா்வாகம் ஒதுக்கித்தரவேண்டும்.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதியை செலவிட முறையான விதிகளை வகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாா்டுகளில் மேம்பாட்டுப் பணிகள் மாமன்ற உறுப்பினா்கள் விருப்பப்படி மேற்கொள்ள வழி ஏற்படும் என்றாா்.

காங்கிரஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையா் மற்றும் மாமன்றச் செயலா் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.