தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது: வைகோ

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

News image

மதிமுக பொதுச் செயலா் வைகோ - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:27 am IST

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கெனவே அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மீனவா்கள் கடல் தொழிலை சாா்ந்து உள்ளனா். இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் போது, தமிழக கடல் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படுவதுடன், கடலை நம்பி வாழும் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும்.

எனவே தமிழக அரசு கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மட்டுமன்றி, தமிழகத்தின் எந்த கடல்பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் கடல்சாா் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக, மீன்வளங்கள் குறைவதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவா் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்துக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.