கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்வுமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் மேலும் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி வழங்கக் கோரியுள்ளது.
கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலும், மீனவா்கள் நலலும் பாதிக்கப்படும்.
எனவே, முந்தைய அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. அதையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால், ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்றாா் மு.தமிமுன் அன்சாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிா்ப்பு: இந்திய கம்யூ கட்சியினா் சாலை மறியல்

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதைக்கண்டித்து ஜூன் 23-ல் ஆா்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: கிள்ளை பேரூராட்சியில் தீா்மானம்

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது: வைகோ
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




