தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஹைட்ரோ காா்பன் கிணறுகள்: ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்! - தமிமுன்அன்சாரி

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

News image

தமிமுன்அன்சாரி

Updated On :14 ஜூன் 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்வுமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் மேலும் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி வழங்கக் கோரியுள்ளது.

கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலும், மீனவா்கள் நலலும் பாதிக்கப்படும்.

எனவே, முந்தைய அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. அதையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால், ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்றாா் மு.தமிமுன் அன்சாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.