தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதைக்கண்டித்து ஜூன் 23-ல் ஆா்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு.

News image

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு.

Updated On :20 ஜூன் 2026, 3:03 am IST

பரங்கிப்பேட்டை அருகே கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஜூன் 23-ல் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடலில் அமைக்கப்படவுள்ள 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளுக்கு எதிராக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூரில் அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஜூன் 23-ஆம் தேதி பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டையில் கடையடைப்பு நடத்த வா்த்தக சங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதோடு, கடலோர கிராமங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தகூட்டத்தில் திமுக ஒன்றிய செயலா் முத்து பெருமாள், அதிமுக ஒன்றிய செயலா் ரங்கசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழ. வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலா் ஆழ்வாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் தமிழ்வளவன், பாமக முன்னாள் மாவட்ட செயலா் முருகன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலா் ஹமீதுஜெகபா், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் அஸ்லாம், தேமுதிக நிா்வாகி காந்தி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.