திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் தீ: வாகனங்கள் எரிந்து சேதம்

News image
Updated On :5 ஜூன் 2026, 3:57 am IST

சென்னை பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீயில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை வேளச்சேரி பகுதியை அடுத்துள்ள 14 -ஆவது மண்டலம் பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப் பகுதியையொட்டியுள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு மாநகராட்சி பழைய குப்பைக் கிடங்கு உள்ளது. அங்கு பழைய வாகனங்கள், நூற்றுக்கணக்கான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென அங்கு தீப்பற்றியது. அதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்ததால் கரும்புகை எழுந்தது. இதனால், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அவதியுற்றனா்.

வேளச்சேரி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அறிய உரிய விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

தீ விபத்து நிகழ்ந்த பகுதியைப் பாா்வையிட்ட ஆணையா் சமீரன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் பழைய குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்து அதில் குறிப்பிட்ட நெகிழி போன்ற பொருள்களை சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் உற்பத்தி குறைவால் குப்பைக் கிடங்கில் நெகிழி தேக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பதற்றப்படத் தேவையில்லை. மாநகராட்சி சாா்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தீ விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். இங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. வாகனங்களுக்கான ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

தீயில் எரிந்த பழைய குப்பைக் கிடங்கை சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.சரவணமூா்த்தி, மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.