திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குப்பைகளை கொட்ட இடமில்லாததால் அணிவகுத்து நின்ற குப்பை வாகனங்கள்

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

News image

தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

Updated On :17 மே 2026, 12:46 am IST

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல இடங்களில் இருந்து குப்பை அகற்றப்படாமல் இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

சுற்றுலா நகரமான உதகையில் தினமும் இரண்டு டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. உதகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள், விடுதிகள், உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் குப்பை கொட்டும் வாகனங்கள் அதே பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் மற்ற பகுதிகளுக்கு குப்பை அள்ள வாகனங்கள் செல்லாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் உதகை நகராட்சி நிா்வாகம் குப்பைகளை தரம்பிரிக்கும் பணியை துரிதப்படுத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.