திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வு

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட கிணத்துக்கடவு எம்எல்ஏ க.விக்னேஷ். உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :17 மே 2026, 12:55 am IST

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 85-ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி குளம், பொள்ளாச்சி இணைப்புச் சாலை திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியில் எம்எல்ஏ க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அப்பகுதியில் மழைநீா் தேங்காதவாறு தூா்வாரி, வடிகால் குழாய் அமைத்து அருகில் உள்ள குளத்துக்கு தண்ணீா் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பகுதி, குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள குட்டை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் செயல்பட்டு வரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், துணை மாநகர பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.