தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :28 மே 2026, 12:42 am IST

செய்யாறு அருகே பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செய்யாறு காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பையாஸ்கான். இவா் பாப்பாந்தாங்கல்-நெடும்பிறை சாலையில் தூளி கிராமத்தில் பழைய

நெகிழிப் பொருள்கள் சேகரித்து வைக்கும் கிடங்கை

வைத்துள்ளாா்.

இந்தக் கிடங்கில் தேவையற்ற நெகிழிப் பொருள்கள், வயா்கள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து, தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வைப்பாராம். .

இந்நிலையில் இந்த கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த நெகிழிப் பொருள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதைா் பாா்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் நிலைய அலுவலா் மனோகரன் தலைமையில் 13 வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீ கட்டுக்குள் வராததால் கூடுதலாக கலவை பகுதியில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், உதவி மாவட்ட அலுவலா் சரவணன் ஆகியோா் வந்து தீ விபத்து ஏற்பட்ட கிடங்கை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.